Advertisment

பெண் வி.ஏ.ஓ. மீது தி.மு.க.வினர் தாக்குதல்; அண்ணாமலை கடும் கண்டனம்

விழுப்புரத்தில் பெண் வி.ஏ.ஓ. மீது தி.மு.க.வினர் தாக்குதல் நடத்தியதற்கு தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Annamalai 1

பெண் கிராம நிர்வாக அதிகாரியை திமுக பிரமுகர் தாக்கியதாக அண்ணாமலை புகார் தெரிவித்துள்ளார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

BJP Annamalai | Villupuram | பெண் கிராம நிர்வாகி அதிகாரி தாக்கப்பட்ட சம்பவத்துக்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ட்விட்டர் எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் விடுத்துள்ள அறிக்கையில், “விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த ஏப்ரல் 19 நாடாளுமன்றத் தேர்தல் நாளன்று, திமுக நிர்வாகி ராஜீவ் காந்தி என்ற நபர், பெண் கிராம நிர்வாக அலுவலர், சாந்தியை கன்னத்தில் அறைந்தும், வயிற்றில் எட்டி உதைத்தும் கொடூரமாகத் தாக்குதல் நடத்தியுள்ளது மிருகத்தனமானது.

Advertisment

வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, பாட்டாளி மக்கள் கட்சி சகோதரர்கள், தேர்தல் பிரச்சார விதிகளை மீறியதாகப் பொய்ப் புகார் அளிக்க மறுத்ததால், அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நாளன்று, இந்தக் கொடூரமான தாக்குதலை நடத்தியிருக்கிறார் திமுக நிர்வாகி ராஜீவ் காந்தி. 

ஆட்சிக்கு வரும் முன்னர், தெருத் தெருவாகச் சென்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்த முதலமைச்சர் ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த பிறகு, தனது கட்சியினரைச் சிறிய அளவில் கூட கண்டிக்காதது தான், அரசு அதிகாரிகளுக்கு, குறிப்பாக, பெண் அதிகாரிகளுக்கு எதிரான திமுகவினரின் தொடர் அராஜகத்திற்குக் காரணம். 

பெண் கிராம அலுவலரை எட்டி உதைத்துத் தாக்கிய திமுக நிர்வாகி ராஜீவ் காந்தியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளதாகத் தெரிகிறது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Villupuram BJP Annamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment