/indian-express-tamil/media/media_files/1WBCrOJ3VVM2iMSi312i.jpg)
தமிழக பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை தனது அறிக்கையில், சென்னை வெள்ளத்தின் போது செயலற்று காணப்பட்டதுபோல் இருக்காமல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.
திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை நாளை (டிச.18) வரை தொடரும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது.
குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டப் பகுதிகளில், சுமார் 200 மி.மீ. மழை இது வரை பொழிந்துள்ளது என்றும், அடுத்த இரண்டு நாட்களுக்கும் கடுமையான மழை தொடரும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காமல், சென்னை மழை வெள்ளத்தின்போது பொதுமக்களைப் பாதிப்புக்குள்ளாக்கியது போல, செயலற்று இருக்காமல், உடனடியாக போர்க்கால நடவடிக்கைகளைத் தொடங்கி, தென்மாவட்டங்களில் பொதுமக்களுக்குத் தேவையான பொருள்களையும், பேரிடர் மீட்புக் குழுக்களையும் உடனடியாக அனுப்பி, மீட்புப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
தென்மாவட்ட பொதுமக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன், கவனமாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், நெல்லை, தென்காசி, குமரி உள்ளிட்ட தென் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சகோதரர்கள், மழை நின்ற பிறகு, பொதுமக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என்றும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.