"அண்ணாமலை அரசியலுக்கு தகுதி இல்லாதவர், நடிகை கஸ்தூரி பேசியது கண்டிக்கத்தக்கது"… எஸ்.வி சேகர்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அரசியலுக்கு தகுதி இல்லாதவர் என்றும் தெலுங்கு மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி பேசியது கண்டிக்கத்தக்க செயல் என்றும் எஸ்.வி சேகர் விமர்சித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அரசியலுக்கு தகுதி இல்லாதவர் என்றும் தெலுங்கு மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி பேசியது கண்டிக்கத்தக்க செயல் என்றும் எஸ்.வி சேகர் விமர்சித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
annamalai vs sv sekar

அண்ணாமலையின் அரசியல் வாழ்க்கை குறித்து பேசிய எஸ்.வி.சேகர்

தமிழக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எஸ்.வி சேகர் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்நிலையில் டப்பிங் யூனியன் பிரச்சனை தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த எஸ்வி சேகர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்துள்ளார். 

Advertisment

அண்ணாமலை போன்று அரசியல் செய்தால் 40க்கு பூஜ்ஜியம்தான் எடுக்க முடியும் என்றும் அண்ணாமலை அரசியலுக்கு தகுதி இல்லாதவர் என்றும் கூறியுள்ளார். திமுகவை திட்டிக்கொண்டே இருந்தால் வளர முடியாது அண்ணாமலை வாயை திறந்தாலே பொய்தான் ஐந்து லட்சம் ரூபாய்க்கு வாட்ச் வாங்கியுள்ளார். ரசீது கேட்டால் அவரிடம் ரசீது இல்லை என்று கூறுகிறார். 25 வருடமானாலும் தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரமுடியாது என்றும் 1980 முதல் திமுகவில் அனைவருமே எனக்கு நண்பர்கள், 1992 முதல் ஜெயலலிதா எனக்கு சகோதரி மாதிரி என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

நான் நேர்மையாக உள்ளேன், இதுவரை ஒரு பைசா கமிஷன் கூட வாங்கியதில்லை, அரசியலில் பணம் வாங்காமல் இருக்க முடியும் என்பதை நான் நிரூபித்துள்ளேன் என்றும் பேசினார். 

திமுகவை குறை சொல்வதால் ஆட்சி மாற்றம் வந்து விடாது என்றும் திமுக ஆட்சி தவறாக உள்ளது என்றால் எப்படி நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களில் வெற்றி பெற்றார்கள் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

Advertisment
Advertisements

பாஜகவில் சேரலாம் என நினைத்து சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கஸ்தூரி வாய்க்கு வந்ததை பேசியதால் அந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கமே சிதைந்துவிட்டதாகவும் இனிமேல் அவருக்கு தமிழக பாஜகவில் இடம் இல்லை.  

ஆந்திராவிலும் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆகையால் கஸ்தூரி சொந்தமாக ஒரு கட்சி தொடங்கினால்தான் உண்டு. அப்போது அவர் வாய்க்கு வந்ததை பேசலாம் என்று எஸ்.வி சேகர் செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.

பொதுவெளியில் பேசும்போது என்ன பேச வேண்டும் என்பதை விட என்ன பேசக்கூடாது என தெரிந்து கொண்டு செல்வது நல்லது. எனவே நடிகை கஸ்தூரி பேசியது கண்டிக்கத்தக்க ஒன்று என்றும் பிராமணர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கஸ்தூரி சொல்வது தவறு என்றும் அவர் கூறினார்.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“ 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: