அண்ணாமலை தோல்வி; மொட்டை அடித்த பா.ஜ.க நிர்வாகிக்கு வந்த சோதனை: வீட்டிற்கு சென்ற வனத்துறை

அவர் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியில் இருப்பது புலி நகமோ என வனத்துறை சந்தேகம்.

அவர் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியில் இருப்பது புலி நகமோ என வனத்துறை சந்தேகம்.

author-image
WebDesk
New Update
BJP memb.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணி 40 இடங்களில் வெற்றி பெற்றது. புதுச்சேரி உடன் சேர்த்து 40 இடங்களில் வெற்றி பெற்றது. கோவை மக்களைத் தொகுதியில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிட்டார்.  அண்ணாமலை 4,47,101 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். சுமார் 1,17,561 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். 

Advertisment

தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 5,64,662 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.கவின் சிங்கை ராமச்சந்திரன் 2,35,313 வாக்குகள் பெற்று 3-ம் இடத்திற்கு சென்றார். இந்நிலையில் தேர்தலுக்கு முன்னதாக, தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ஒருவர், கோவையில் அண்ணாமலை தோற்றால் மொட்டை அடித்து மீசையை மழித்து விடுறேன் என்று சவால் விட்டார். 

இந்நிலையில், தேர்தலில் அண்ணாமலை தோற்ற நிலையில் அவர் நடுரோட்டில் மொட்டை அடித்து மீசையை மழித்துக் கொண்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், பா.ஜ.க நிர்வாகி ஜெயசங்கர் மொட்டை அடித்துக் கொண்ட வீடியோவில் அவர் கழுத்தில் தங்கச் சங்கிலி போல் அணிந்திருந்தார். 

இந்நிலையில் அவர் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியில் இருப்பது புலி நகமோ என வனத்துறை சந்தேகமடைந்தனர். விசாரணையில் அது 10 வருடங்களுக்கு முன் திருச்செந்தூர் கோயிலில் தெருவோர வியாபாரிகளிடம் வாங்கிய பொருள் என தெரிய வந்தது. 

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

BJP Annamalai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: