Advertisment

அறிவாலய வாசிகளை காப்பது தான் தமிழக போலீசின் முதன்மை கடமையா? அண்ணாமலை அறிக்கை

பா.ஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை காவல்துறையின் அறிக்கைக்கு பதிலளித்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அறிவாலய வாசிகளை காப்பது தான் தமிழக போலீசின் முதன்மை கடமையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

author-image
WebDesk
New Update
K Anna malai

தமிழக பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை

கோவை கார் வெடிப்பு வழக்கில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆளும் தி.மு.க அரசின் மீதும் காவல்துறை மெத்தமாக செயல்பட்டதாகவும் விமர்சனங்களை முன்வைத்ததற்கு, தமிழ்நாடு காவல்துறை அண்ணாமலையின் கருத்துகள் விசாரணையின் போக்கை திசை திருப்புவதாக அறிக்கை வெளியிட்டது.

Advertisment

இந்நிலையில், பா.ஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை காவல்துறையின் அறிக்கைக்கு பதிலளித்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அறிவாலய வாசிகளை காப்பது தான் தமிழக போலீசின் முதன்மை கடமையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “நேற்று தமிழக காவல்துறை தலைமையகத்தில் இருந்து ஒரு பத்திரிகை செய்தி வெளியானது. இது இந்நாள் தமிழக காவல்துறை டி.ஜி.பி-யாகிய சைலேந்திர பாபு ஒப்புதலோடு தான் வெளியிட்டிருப்பார்கள் என்ற நம்பிக்கையோடு, ஒரு முன்னாள் இந்திய காவல் பணி அதிகாரியாகவும் இந்நால் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராகவும் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளேன்.

தமிழக காவல்துறை டி.ஜி.பி சைலேந்திர பாபு காவல்துறையில் இருக்கும் ஒரு தனிப்பிரிவு வழங்கிய அறிக்கையின் கீழ்காணும் பகுதிகளை இதுவரை கண்டிருக்க மாட்டார் என்பதை அவர் வழங்கிய பத்திரிகை செய்தி தெளிவுபடுத்தியுள்ளது. இந்த பகுதிகளின் விளக்கங்கள் இந்த அறிக்கையில் உள்ளது.

நான் பல கருத்துகள் கூறி விசாரணையின் போக்கை திசைதிருப்ப முயற்சிப்பதாக தொடங்குகிறது. காவல்துறை தலைமையகத்திலிருந்து வெளியிடப்பட்ட பத்திகைச் செய்தி ஒரு ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி என்கிற முறையில் ஆளும் அரசை கேள்வி எழுப்புவதும் மக்களிடம் உண்மையைக் கொண்டு சேர்ப்பதும் எங்களுடைய பொறுப்பாக உணர்கிறோம். அதை கூடாது என்பதற்கு காவல்துறைக்கு எந்தவித அதிகாரமும் இல்லை. டி.ஜி.பி சைலேந்திர பாபு அவர்களே நீங்கள் ஒரு காவல் அதிகாரி தானே தவிர தங்களை ஒரு சர்வாதிகாரியாக நினைத்துக்கொள்ள வேண்டாம்.

விசாரணையின் போக்கை திசை திருப்புவதாக நான் கருத்துக்கள் சொன்னதாக நீங்கள் கூறுகிறீர்கள். அப்படி நான் சொன்ன கருத்துக்கள் பின்வருமாறு:

  1. 23ஆம் தேதி அதிகாலை கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி என்ற செய்தி வந்தது. 23ம் ஆம் தேதி மதியம் இதை பற்றி பதிவிட்டிருந்த நான் காவல்துறை உடனடியாக தீவிர விசாரணையில் இறங்கியதை பாராட்டினேன். மற்றும் இந்த ‘வெடி விபத்தில்’ இருக்கும் மர்மத்தை காவல்துறை விலக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தேன்.
  2. 23ஆம் தேதி இரவு நடந்த விபத்து சிலிண்டர் விபத்து இல்லை. இது ஒரு தீவிரவாத சதிச்செயல் என்றும் இதை மேற்கொண்ட நபருக்கு ஐஎஸ்ஐஎஸ் என்கிற தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருந்தது என்றும் நான் பதிவிட்டிருந்தேன். இதை தமிழக காவல்துறை மற்றும் தமிழக அரசு மறுக்க முடியுமா?
  3. சுமார் 24 மணி நேரம் காத்திருந்த பின்னரும் காவல்துறையிடமிருந்தோ தமிழக அரசிடம் இருந்தோ எவ்வித தகவலும் வராததால் 24 ஆம் தேதி இரவு கோவையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடந்து 36 மணி நேரம் ஆன பின்பும் தமிழக முதல்வர் இதைப் பற்றி பேச மறுப்பது ஏன் என்ற கேள்வியை முன்வைத்தேன்.

இன்றுடன் இந்த சம்பவம் முடிந்து 7 நாட்கள் ஆகிவிட்டது. இதுவரை தமிழக முதல்வர் மௌனம் காப்பது அனைவரும் அறிந்ததே.

இந்த துறைக்கு சற்றும் தொடர்பே இல்லாத சாராய அமைச்சர் கோவையில் நடந்த தற்கொலை படை தாக்குதலை பற்றி சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார். ஊழல் செய்வது எப்படி என்பதை மட்டுமே அறிந்த இவருக்கும் உள்துறைக்கும் என்ன சம்மந்தம்?

  1. தமிழக அரசு மற்றும் தமிழக காவல்துறை மௌன நிலையில் இருப்பதால், ஒரு ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சியாக பத்திரிகையாளர் வாயிலாக சில கேள்விகளை முன் வைத்தோம். அந்த கேள்விகள் பின்வருமாறு
  • தனிப்படை அமைத்து விசாரித்து கொண்டிருக்கிருக்கிறோம் என்று சொல்லும் காவல்துறை அடுத்தகட்ட உண்மைகளை சொல்வதற்கு தயங்குவது ஏன்?
  • இதுவரை இது ஒரு தீவிரவாத சதி செயல் என்று சொல்லத் தயங்குவது ஏன்?

(இதில் விசித்திரம் என்னவென்றால் நேற்று நீங்கள் கொடுத்த பத்திரிகை செய்தியில் கூட நடந்தது தற்கொலைப்படை தாக்குதல் என்றோ தீவிரவாத சதிச் செயல் என்றோ குறிப்பிடப்படவில்லை. இப்போதுதான் சிலிண்டர் வெடிப்பில் இருந்து குண்டு வெடிப்புக்கு தமிழக காவல்துறை முன்னேறியுள்ளது. இதை தீவிரவாத தாக்குதல் என்றோ தற்கொலைப்படை தாக்குதல் என்றோ குறிப்பிடுவதற்கு பல மாதங்கள் ஆகலாம்)

  • அக்டோபர் 21 ஆம் தேதி ஜமேஷா முபீன் வைத்திருந்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இதை காவல்துறை மறுக்க முடியுமா?

  • இறந்த ஜமேஷா முபீன் மற்றும் கைது செய்யப்பட்ட அனைவருக்கும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருந்ததை சுட்டிக்காட்டினோம். காவல்துறை இதை மறுக்குமா?

  • கைது செய்யப்பட்ட 5 பேர் மீது யு.ஏ.பி.ஏ சட்டம் பாயாதது ஏன் என்ற கேள்வியை எழுப்பியிருந்தோம்.

  • எதிர்க்கட்சியினர் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பலியான வழக்குகளுக்கு கூட வழக்கு பிரிவுகளுடன் கோபாலபுரம் குடும்ப தொலைக்காட்சிகளின் மூலமாக செய்திகள் வெளியிடும் நீங்கள் ஒரு தீவிரவாத சம்பவத்தில் கைதான 5 நபர்கள் மீது எந்த வழக்கு பிரிவின் கீழ் கைதாகியுள்ளார்கள் என்பதனை குறிப்பிடாமல் பத்திரிகை செய்தி வெளியிட்டது ஏன் என்று கேள்வி எழுப்பினோம்.

( இந்த கேள்வி எழுப்பி சரியாக 3 மணி நேரத்துக்கு பின்பு, கோவை மாவட்ட ஆணையர் செய்தியாளர்களை சந்தித்து புலன் விசாரணையில் பதியப்பட்ட வழக்கின் பிரிவுகள் மாற்றப்பட்டு யு.ஏ.பி.ஏ சட்டம் போடப்பட்டதாகக் கூறினார். இதிலிருந்து தெரியவில்லையா தங்கள் தலைமையிலான காவல்துறை எப்படி செயல்படுகிறது என்று?

  • தமிழக உளவுத்துறையின் செயல்பாடுகள் பற்றியும் ஒருசாராரை மட்டும் அரவனைத்து செயல்படும் உளவுத்துறையின் நோக்கத்தைப் பற்றியும் கேள்வி எழுப்பினேன்.

  • ஈரோடு மற்றும் சேலத்தில் பாரிஸ் நகரில் நடந்த தீவிரவாத தாக்குதல் போல் நடத்திட திட்டம் தீட்டியவர்களை கமுக்கமாக கைது செய்து இதைப் பற்றி செய்திகள் வெளியிடாத அரசின் உள்நோக்கத்தைக் கேள்வி எழுப்பினேன்.” என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “ஜூலை மாதத்திலிருந்து ஜமேஷா முபீன் பற்றிய விவரங்கள் இருந்தும் எதற்காக காத்திருந்தது தமிழக காவல்துறை” என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ள்ளார்.

கோவையில் கார் வெடிப்பு சம்பவம் நடந்த அக்டோபர் மாதம் 23ஆம் தேதிக்கு முன்னரே ஜமேஷா முபீன் பற்றிய தகவல்கள் காவல்துறை தலைமை மற்றும் உளவுத்துறைக்கு காவல்துறையில் இயங்கும் ஒரு தனிப்பிரிவு வழங்கியுள்ளது.

945 நபர்களுக்கு ஐஎஸ் ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகவும் மக்கள் கூடும் இடங்களில் இவர்கள் தனி நபராக திடீர் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகவும் ஒரு பட்டியலை கொடுத்துள்ளது அந்த தனிப்பிரிவு. அதில் ஜமேஷா முபீன் 89ஆம் இடத்தில் உள்ளார் எனக் கூறி அந்த அறிக்கையில் உள்ள அந்தப் பகுதியின் படத்தை அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.

ஜூலை மாதம் 19ஆம் தேதி கொடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கைக்கு பின்னரும் ஜமேஷா முபீனை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வராமல் கோட்டை விட்டுள்ளது தமிழக காவல்துறையின் உளவுத்துறை. இந்த வருடம் செப்டம்பர் மாதம் முடியும் வரையில் கோவை நகரத்திற்கான உளவுத்துறை அதிகாரி நியமிக்கப்படாமல் இருந்தது பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிறகு தான் அவசர அவசரமாக இந்த பணியிடம் நிரப்பப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கிறது. இது தான் தமிழகத்தில் உளவுத்துறை செயல்படும் லட்சணம்.” என்று அண்ணாமலை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamilnadu Bjp Sylendra Babu Annamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment