Advertisment

தமிழ்நாட்டில் கள்ளுக்கடை; ரேஷனில் பனங்கருப்பட்டி: அண்ணாமலை வாக்குறுதி

தமிழக பாஜக தலைவர் கு. அண்ணாமலை தனது நடைபயணத்தின் இடையே பதநீர், நுங்கு சாப்பிட்டார். அப்போது தமிழ்நாட்டில் கள்ளுக்கு அனுமதி வழங்கப்படும் என்றார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Annamalai said that Kallu kadai shops will be opened in Tamil Nadu

தமிழ்நாட்டில் கள்ளுக்கடை திறக்கப்படும் என அண்ணாமலை கூறினார்.

தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் பாஜக தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ என்ற நடைபயணத்தை மேற்கொள்கிறார்.

Advertisment

இதனை மத்திய அமைச்சர் அமித் ஷா கொடியசைத்து தொடங்கிவைத்தார். மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லவும், தமிழகத்தில் ஊழலுக்கு எதிராகவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்' என்ற யாத்திரை தொடங்கியுள்ளார்.

,

இந்த நிலையில் ராமநாதபுரம், பரமக்குடியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்றைய பாதயாத்திரையை நிறைவு செய்தார்.

,

அப்போது, “தமிழகத்தில் கள்ளுக்கடை திறக்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது.
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு ரேஷன் கடைகளில் சீனிக்கு பதிலாக பனங்கருப்பட்டி வழங்கப்படும்” என்றார்.

,

முன்னதாக பனை விவசாயி ஒருவரின் வடலிக்கு சென்று நுங்கு, பதநீர் சாப்பிட்டார். அப்போது கள்ளு இருந்தா நல்லா இருக்கும் என்றார்.

,

இதைக் கேட்டு அங்கிருந்தவர்கள் சிரித்தனர். மேலும் கடுக்காய், பனங்காய், கிழங்கு குறித்தும் கேட்டறிந்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Annamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment