/indian-express-tamil/media/media_files/1WBCrOJ3VVM2iMSi312i.jpg)
தமிழ்நாட்டில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றிபெறும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இன்றும் (ஜன.7,2024) நாளையும் ‘உலக முதலீட்டாளர் மாநாடு’ பிரம்மாண்ட அளவில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றி பெறும் என தெரிவித்துள்ள தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை, இரண்டு நாட்களில் ரூபாய் பத்து லட்சம் கோடி முதலீட்டை எதிர்பார்க்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிலிருந்தும் ஐரோப்பாவிலிருந்தும் முதலீட்டாளர்களைக் அழைத்துவந்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது.
இந்த மாநாட்டின் அதிகாரப்பூர்வ பங்குதாரர் நாடுகளாக சிங்கப்பூர், கொரியா, இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, டென்மார்க் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் பங்கு பெறுகிறார்கள்.
இதற்கு முன் 2015 ஆம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ. 2,42,160 கோடி முதலீடுகளை ஈர்க்கும் விதமாக 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.
தற்போது ரூ.5.50 லட்சம் கோடி முதலீட்டை இருக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனக் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டை, 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் கொண்ட பொருளாதாரமாகத் மாற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.