Advertisment

இந்த 11 அமைச்சர்களுக்கு சிக்கல்: அண்ணாமலை வெளியிட்ட பட்டியல்

பொன்முடியை போல் 11 அமைச்சர்கள் இருப்பதாகவும், விரைவில் அந்த வழக்குகளிலும் தீர்ப்புகள் வரும் என்று நம்புவதாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
sadsa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பொன்முடியை போல் 11 அமைச்சர்கள் இருப்பதாகவும், விரைவில் அந்த வழக்குகளிலும் தீர்ப்புகள் வரும் என்று நம்புவதாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisment

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது : “ 65 % வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக உயர்நீதிமன்றம் சரிபார்த்து , பொன்முடிக்கு தண்டனை வழங்கி இருக்கிறது. இந்த தீர்ப்பை தமிழக பா.ஜ.க வரவேற்கிறது. டி.எம்.கே பைல்ஸ் பார்ட் 1-ல் குறிப்பிட்ட சில நிறுவனங்கள் பெயர்கள் கூட இந்த தீர்ப்பில் உள்ளது. பொன்முடியின் இன்னொரு வழக்கின் தீர்ப்பு கூட விரைவாக வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

திமுக அமைச்சரவையில் உள்ள 11 அமைச்சர்கள் மீது, நீதிமன்றத்தில் ஊழல் வழக்குகள் உள்ளன. அந்த வகையில் பொன்முடி, துரை முருகன், கேன்.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம். ஆர்.கே. பன்னீர் செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், தங்கம் தென்னரசு, ரகுபதி, கே.ஆர்.பெரியகருப்பன், அன்பரசன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அமைச்சர்கள் மீதான வழக்கு நீதிமன்றங்களில் நடந்து வருகிறது.

பொன்முடிக்கு வழங்கப்பட்டதே காலம் கடந்த தீர்ப்பு. எனவே வேகமாக மற்ற வழக்குகளுக்கும் தீர்ப்புகள் வர வேண்டும். ஒருவர் புழல் சிறையில் இலாகா இல்லாத  அமைச்சராக இருக்கிறார். இன்னொரு அமைச்சரின் மீது தீர்ப்பு வந்து அவர் பதவி இழக்கிறார்.

அடுத்து கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், தங்கம் தென்னரசு வழக்கின் தீர்ப்புகளையும் எதிர்நோக்கி கொண்டிருக்கிறார்கள்.

இந்தியா கூட்டணி கூட்டத்தில், நிதிஷ்குமார் இந்தியில் பேசியபோது, மொழிபெயர்ப்பு வேண்டும் என டி.ஆர்.பாலு கேட்டுள்ளார்.  அப்போது நிதிஷ் குமார் மொழிபெயர்ப்புக்கு அனுமதிக்கவில்லை. மாறாக முதல்வர்  ஸ்டாலினுக்கும், டி,ஆர்.பாலுவுக்கும் கிழக்கிந்திய கம்பெனி, மெக்காலே கவ்லித்திட்டம், ஆங்கில திணிப்பு எப்படி நடந்து என்பது குறித்து பாடம் எடுத்து அனுப்பி உள்ளார்.

ஆனால் அவர்கள் அமைதியாக வந்து இங்கு உட்காந்திருக்கிறார்கள். தி.மு.க.வால் இந்தியா கூட்டணி உடையும். இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் தி.மு.கதான் காரணமாக இருக்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.  

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment