/indian-express-tamil/media/media_files/KxUW6cbPZy2NNxo4dL4i.jpg)
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவு குறித்து பேசிய அண்ணாமலை, “2026 தேர்தலில் திமுக தோற்கும்” என்றார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான தி.மு.க 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. இந்தத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி கட்சியை சேர்ந்த பா.ம.க இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
இந்நிலையில், இடைத்தேர்தல் தோல்வி குறித்து பேசிய அண்ணாமலை, “அனைத்து கூட்டணி கட்சியினரும் சிறப்பான பணியாற்றினார்கள். இந்தத் தேர்தலில் பெற்ற வாக்குகள், இதர விஷயங்கள் குறித்து அடுத்த சில தினங்களில் தீர்க்கமாக சொல்லுகிறேன். ஏனென்றால் நான் இன்னமும் தேர்தல் முடிவுகளை ஆராயவில்லை” என்றார்.
மேலும், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஈரோடு இடைத்தேர்தல் போன்று மோசமாக நடந்துவிடக் கூடாது என்பதற்காக தேர்தல் ஆணையரை சந்தித்து புகார் அளித்தோம்” என்றார்.
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, “தமிழ்நாட்டில் இடைத்தேர்தலில் வென்ற கட்சி பொதுத்தேர்லில் வென்றது இல்லை” என்றார். இதையடுத்து, “இந்தத் தேர்தல் முடிவுகளை முன்னோட்டமாக எடுத்துக்கொண்டால் 2026ல் திமுக ஆட்சியை இழக்கும்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.