/indian-express-tamil/media/media_files/2025/06/09/dW0aboUSrBwspFg7p9EF.jpg)
அண்ணாமலை
“முதியோர்கள் கொலை, சாதிய கொலை, கூலிப்படை கொலை என மக்கள் எங்கும் நிம்மதியாக இல்லை. தி.மு.க ஆட்சியை அகற்றவே அமித்ஷா வருகை தந்துள்ளார்” என்று அண்ணாமலை கூறினார்.
மதுரை ஒத்தக்கடை பகுதியில் உள்ள வேலம்மாள் மைதானத்தில் பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்து. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது: “இந்த நிகழ்ச்சி மேடையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது, “180 ரூபாயக்கு கீழ் வருமானம் பெற்றவர்களின் சதவீதம் 16.2% ஆகி இருந்தது. ஆனால் 10 ஆண்டுகளில் இந்த சதவீதத்தை 10% ஆக மாற்றியவர் பிரதமர் மோடி. இந்த பெருமையெல்லாம் பிரதமரையே சாரும். மக்களின் பணத்தை கொள்ளையடித்து சினிமா எடுக்க செலவு செய்கிறவர்களுக்கு எப்படி மக்களை பற்றி சிந்திக்க தோன்றும். மக்கள் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறார்கள்.
கடந்த 4 ஆண்டுகளாக தமிழகத்தை பின்னோக்கி கொண்டு செல்கிறது தி.மு.க. முதியோர்கள் கொலை, சாதிய கொலை, கூலிப்படை கொலை என மக்கள் எங்கும் நிம்மதியாக இல்லை. தி.மு.க ஆட்சியை அகற்றவே அமித்ஷா வருகிறார். உலகில் மிக வேகமாக வறுமையை ஒழித்த நாடு இந்தியா; அதை செய்தவர் பிரதமர் மோடி. 2026ம் ஆண்டு தி.மு.க ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்காக தான் இந்த கூட்டம். தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்புவது தான் ஒரே இலக்கு” என்று பேசினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.