கூட்டணியில் சேர தினகரனிடம் அண்ணாமலை வலியுறுத்தல்: நவம்பரில் நல்ல முடிவு வருமா?

இந்தச் சந்திப்பின்போது, திமுகவை வீழ்த்த தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும் என அவரிடம் மீண்டும் வலியுறுத்தினேன். எனவே, அவர் நவம்பரில் நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறேன். இதைத் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வத்தையும் நான் சந்திக்க உள்ளேன்

இந்தச் சந்திப்பின்போது, திமுகவை வீழ்த்த தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும் என அவரிடம் மீண்டும் வலியுறுத்தினேன். எனவே, அவர் நவம்பரில் நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறேன். இதைத் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வத்தையும் நான் சந்திக்க உள்ளேன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Annamalai TTV

Annamalai TTV Dinakaran

தேசிய ஜனநாயக கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கூட்டணியில் இருந்து விலகுவதாக டிடிவி தினகரன் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, அவரை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.

Advertisment

திங்கள்கிழமை மாலை, சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரனின் இல்லத்திற்கு அண்ணாமலை நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். இன்று காலை, பாஜக நிர்வாகியும், நடிகருமான சரத்குமாரின் மாமியார் கீதா ராதாவின் மறைவையடுத்து, சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு ஆறுதல் கூற சென்ற அண்ணாமலை, அங்கு செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், "டிடிவி தினகரன் 2024 முதல் எங்கள் கூட்டணியில் இருந்தார். அவர் சமீபத்தில் கூட்டணியை விட்டு வெளியேறுவதாக அறிவித்தார். அவர் ஒரு மாதம் சுற்றுப்பயணத்தில் இருந்ததால், இப்போது சென்னை வந்ததும் அவரை நேரில் சந்தித்தேன். இந்தச் சந்திப்பின்போது, திமுகவை வீழ்த்த தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும் என அவரிடம் மீண்டும் வலியுறுத்தினேன். எனவே, அவர் நவம்பரில் நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறேன். இதைத் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வத்தையும் நான் சந்திக்க உள்ளேன்" என்றார்.

Advertisment
Advertisements

முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் - விஜய் கருத்து

முதல்வர் மு.க. ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் குறித்த நடிகர் விஜயின் கருத்தை அண்ணாமலை வரவேற்றார். "விஜய்க்கு வாய் இருக்கிறது, அவர் பேசுவார். ஏற்கெனவே, திமுக குடும்பத்தின் ஆடிட்டரை துபாய்க்கு செல்லும்போது முதல்வர் ஸ்டாலின் அழைத்துச் சென்றார். அதன் அடிப்படையில்தான் இப்போது விஜய் குற்றம் சாட்டுகிறார். தங்கள் மேல் குற்றம் இல்லையென்றால் முதல்வர் தரப்பு வெளிநாட்டு பயணங்கள் குறித்து வெள்ளை அறிக்கை கொடுக்கட்டும்" என்று கூறினார்.

‘மேக் இன் இந்தியா’ திட்டமும், ஜிஎஸ்டியும்

மேலும், "'மேக் இன் இந்தியா' திட்டத்துக்காகவே வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் பல்வேறு முதலீடுகளை செய்கின்றன. இதனை மறைத்து வெளிநாடுகளில் சென்று முதல்வர் ஸ்டாலின் புகைப்படம் எடுக்கிறார். கருணாநிதியை துரோகி, மோசக்காரன் என சபாநாயகர் அப்பாவு கடந்த காலங்களில் பேசினார், இப்போது அவர் திமுகவில் உள்ளார். தமிழ்நாட்டில் திமுகவுக்கு எதிராக யாரும் பேசினால் அவரை பாஜகவின் பி டீம் என்று திமுக சொல்கிறது. 

Annamalai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: