Advertisment

டாஸ்மாக் கடைகளில் வெளி ஆட்கள் வேலை செய்கிறார்களா? 'செக்' வைக்கும் அரசு

டாஸ்மாக் கடைகளில் ஆய்வின்போது ஊழியர்கள் இல்லை என்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
டாஸ்மாக் கடைகளில் வெளி ஆட்கள் வேலை செய்கிறார்களா? 'செக்' வைக்கும் அரசு

தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் நிர்வகிக்கப்படும் டாஸ்மாக் கடைகளில் ஆய்வின்போது ஊழியர்கள் இல்லை என்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் பணியாளர்களுக்கு பதிலாக வெளிநபர்கள் பணியாற்றுவதாக புகார்கள் குவிந்ததால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

publive-image

இந்த நிலையில், பணியிலிருக்கும்போது டாஸ்மாக் தலைமை அலுவலகத்திற்கோ அல்லது வங்கி பணிகளுக்கோ செல்லவேண்டும் என்றால் உரிய அனுமதி பெற்று செல்லலாம் என்று டாஸ்மாக் நிர்வாக மேலாண் இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.

டாஸ்மாக் நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயல்படும் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் டாஸ்மாக் நிர்வாக மேலாண் இயக்குனர் சுற்றறிக்கை அறிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Tasmac
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment