Advertisment

பொங்கல் பண்டிகை: தாம்பரம்-கோவை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

2024 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம்- கோவை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த ரயில்கள் பல்வேறு தேதிகளில் இயக்கப்பட உள்ளன.

author-image
WebDesk
New Update
railway Train

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் கோயம்புத்தூர் இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. முந்தைய தினம் போக்கியும்,  ஜனவரி 16ஆம் தேதி மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. அடுத்த தினங்களில் திருவள்ளுவர் தினம் மற்றும் காணும் பொங்கல் வருகின்றது.

இந்த நிலையில் தென்னக ரயில்வே,  தாம்பரம் கோயம்புத்தூர் இடையே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

Advertisment



அதன்படி, ‘கோயம்புத்தூர் - தாம்பரம் செல்லும் பொங்கல் சிறப்பு ரயில் ஜனவரி 16 மற்றும் 17 ஆகிய தேதிகளிலும், தாம்பரம் - கோயம்புத்தூர் சிறப்பு ரயில் ஜனவரி 17 மற்றும் 18 ஆம் தேதிகளிலும் இயக்கப்பட உள்ளது.

தொடர்ந்து, பெங்களூரு- திருச்சி பொங்கல் சிறப்பு ரயில் ஜனவரி 12ஆம் தேதியிலும், திருச்சி - பெங்களூரு சிறப்பு ரயில் ஜனவரி 13 ஆம் தேதிகளிலும் இயக்கப்பட உள்ளது.

இந்த அறிவிப்பை தென்னக ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Special Trains Southern Railway Pongal Festival
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment