மற்றொரு சொத்து குவிப்பு வழக்கு: துரைமுருகன் விடுவிப்பு உத்தரவு ரத்து

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. வழக்கை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. வழக்கை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
துரைமுருகன்

தற்போது நீர்வளத் துறை அமைச்சராக இருக்கும் துரைமுருகன் கடந்த 1996- 2001 வரை அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் இருந்து அவரை விடுவித்து வேலூர் கோர்ட் உத்தரவிட்டு இருந்த நிலையில் இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்து இருந்தனர்.  

Advertisment

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன்,  துரைமுருகன் மீதான வழக்கை மீண்டும் வேலூர் கோர்ட் விசாரிக்க வேண்டும். அவரை வழக்கிலிருந்து விடுவித்த உத்தரவை ரத்து செய்கிறேன் என்று ஏப்ரல் 23 தீர்ப்பளித்தார்.

இந்த நிலையில் அமைச்சர் துரைமுருகன் மீதான மற்றொரு சொத்து குவிப்பு வழக்கையும் ஆறு மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டுள்ளார்.  அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கிலிருந்து இருவரையும் விடுவித்து வேலூர் சிறப்பு கோர்ட் 2017 ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை நீதிபதி பி. வேல்முருகன் விசாரித்து  துரைமுருகன் மற்றும் அவரது மனைவி தரப்பில், சொத்துக்கள் வருமான வரிக்கணக்கில் காட்டப்பட்டுள்ளன. இதையடுத்து துரைமுருகன் சார்பில் அவரது மனைவி இல்லத்தரசி வருமான ஆதாயம் இல்லை என கூறி  வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. 

Advertisment
Advertisements

ஆவண ஆதாரங்களை வைத்து இருவரையும் வழக்கில் இருந்து கீழ் கோர்ட் விடுவித்தது. மேலும் ஆவண ஆதாரங்களின் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை எதிர்த்து மறு ஆய்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று வாதிடப்பட்டது. 

இந்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதி வேல்முருகன், அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவியை சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுவித்து வேலூர் சிறப்பு கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார்.  மேலும் வழக்கில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து, தினந்தோறும் விசாரணை நடத்தி 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் வேலூர் சிறப்பு கோர்ட்க்கு உத்தரவிட்டுள்ளார்.

ரூ. 1.40 கோடி சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் துரை முருகன் அவரது மனைவியை விடுவித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது. ரூ.3.92 கோடி சொத்து குவிப்பு வழக்கில் விடுவித்ததை நேற்று உயர்நீதிமன்ற ரத்து செய்து இருந்தது. 

Duraimurugan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: