/tamil-ie/media/media_files/uploads/2023/06/Express-Image-5.jpg)
Malarvizhi IAS
சென்னையில் ஐ.ஏ.எஸ். அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். தர்மபுரி மாவட்ட ஆட்சியராக மலர்விழி இருந்தபோது முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.
இந்த வழக்கு தொடர்பாக இன்று நடைபெற்றது. விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வந்தனர்.
இதைத்தொடர்ந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி மலர்விழி உட்பட 3 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆட்சியராக இருந்தபோது அரசின் ரசீது புத்தகங்கள் வாங்கியதில் ரூ.1.31 கோடி முறைகேடு செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தாகீர் உசைன், வீரையா பழனிவேல் ஆகியோர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.