ரூ.2 ஆயிரம் கோடி போதைப் பொருள்; தமிழ்நாடு வந்த என்.சி.பி: ஜாபர் சாதிக் குடோனில் சோதனை

சென்னை பெருங்குடியில் உள்ள ஜாபர் சாதிக்குக்கு சொந்தமான குடோனில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். ஜாபர் சாதிக் அண்மையில் கைது செய்யப்பட்டார்.

சென்னை பெருங்குடியில் உள்ள ஜாபர் சாதிக்குக்கு சொந்தமான குடோனில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். ஜாபர் சாதிக் அண்மையில் கைது செய்யப்பட்டார்.

author-image
WebDesk
New Update
jaffer sadiq.jpg

ஜாபர் சாதிக்குக்கு சொந்தமன குடோனில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

Tamil Nadu | ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை செய்ததாக அமலாக்கத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisment

மேலும், ஜாபர் சாதிக்கை தனியாக காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் சென்னை பெருங்குடியில் உள்ள ஜாபர் சாதிக் குடோனில் தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினார்கள்.
டெல்லி மேற்கு கைலாஷில் 50 கிலோ சூடோபெட்ரைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

கடத்தலுக்கு தலைவனாக செயல்பட்ட ஜாபர் சாதிக் தலைமறைவாகினார். இந்த நிலையில் சில வாரங்களுக்கு பின்பு ஜாபர் சாதிக் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்திவரும் நிலையில், அவருக்கு சொந்தமான குடோனில் தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தியுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment
Advertisements
Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: