அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா, தமிழகத்தில் பா.ஜ.க. ஒருபோதும் காலூன்ற முடியாது என்றும், அக்கட்சியின் தமிழகக் கனவு ஒருபோதும் ஈடேறாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஒரு தமிழ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி சேர்ந்தால் சிறுபான்மையினரின் வாக்குகள் பெருமளவில் கிடைக்காது என்று அன்வர் ராஜா சுட்டிக்காட்டினார்.
மேலும், கூட்டணி ஆட்சி அமைந்தால், அதில் செங்கமலையன், வேலுமணி போன்றவர்களை வைத்து பா.ஜ.க. திட்டமிடுமா என்ற கேள்விக்கு, அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அ.தி.மு.க. தவிடுபொடியாகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.