/indian-express-tamil/media/media_files/2025/10/06/ramadass-2025-10-06-14-47-59.jpg)
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் நேற்று (அக்.5) இரவு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார். இதயம் சார்ந்த பிரச்சனைக்கான வழக்கமான பரிசோதனைக்காக ராமதஸ் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. இதையடுத்து இன்று காலை (அக். 6) பா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கு ஆஞ்ஜியோ பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகவும், இதனால் அவர் ஐ.சி.யூ-வில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இதனைத் தொடர்ந்து, ராமதாஸ் மகனும் பா.ம.க தலைவருமான அன்புமணி ராமதாஸ் தனது தந்தையை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு வந்தார். மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பா.ம.க தலைவர் ராமதாஸை மருத்துவமனைக்கு நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். இந்நிலையில், பா.ம.க நிறுவனர் ராமதாஸின் உடல் நலம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வழக்கமான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மூத்த இருதயநோய் நிபுணர் டாக்டர்.ஜி.செங்கோட்டுவேலுவின் கீழ் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ராமதாஸ் உடல் நிலை தொடர்பாக முழுமையான பரசோதனை செய்யப்பட்டு, ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.