சட்டப்பேர்வையில் இரு தரப்பு அதிமுகவினருக்கும் இருக்கைகள் ஒதிக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் உள்கட்சி பூசல் உச்சநிலையில் உள்ளது. எடப்பாடி அணி, பன்னீர் செல்வம் அணி என்று இரு தரப்பு அதிமுகவினர் இருக்கின்றனர். இடைகால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவித்துக்கொண்டாலும் உண்மையான அதிமுகவின் தலைவர் யார் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. நீதிமன்றங்களின் தீர்ப்பு ஒருவருக்கு ஆதரவராகவும், மற்றவருக்கு எதிராகவும் இருக்கிறது. மேலும் தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தை எப்படி கையாளும் என்பது ஒரு முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சட்டமன்றம் கூடும்போது, அதிமுக சார்பில் யார் இடம் பெறுவார்கள் என்ற கேள்வி எழுந்த நிலையில். இரு தரப்பு அதிமுகவிற்கு இருக்கைகள் ஒதுக்கப்படும் என்று அப்பாவு தெரிவித்துள்ளார்.