ராஜ்பவன், தமிழ்நாடு, சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய பிரிவுகளில் 2023 ஆம் ஆண்டுக்கான கவர்னர் விருதுகளுக்கு, சமூகத்திற்கு செய்யும் சிறப்பான சேவைகளுக்காக தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை அங்கீகரிப்பதற்காக தேர்ந்தெடுக்கவுள்ளனர். இதற்கான விண்ணப்பம் அளிக்கும் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ வெளியீட்டில், "அவர்களை முறையாக அங்கீகரித்து, ஊக்குவித்து, பாராட்டி, அதன் மூலம் திறமையான, உள்ளடக்கிய மற்றும் ஒத்திசைவான சமுதாயத்தை அதன் நேர்மறை சக்திகளைப் பயன்படுத்திக் கட்டமைக்க உதவுவதற்காக" விருதுகள் வழங்கப்படுவதாகக் கூறப்பட்டது.
விருதுகள் வழங்கப்படும், மேலும் விருது பெற்றவர்கள் குடியரசு தினத்தன்று (ஜனவரி 26,2024) ஆளுநரால் நேரில் பாராட்டப்படுவார்கள். விருதுகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் ஜூன் 5 முதல் வரவேற்கப்படுகின்றன, விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகளைப் பெறுவதற்கான கடைசி நாள் ஜூலை 31, 2023, மாலை 5 மணிக்குள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பிரிவிலும் நான்கு வெற்றியாளர்கள் (ஒரு நிறுவனம் மற்றும் மூன்று நபர்கள்) தேர்ந்தெடுக்கப்படுவார்கள். நிறுவனத்திற்கான விருது ரூபாய் 5 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுப் பத்திரம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.
தனிநபருக்கு வழங்கப்படும் விருது 2 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டுப் பத்திரத்துடன் இருக்கும். தனிநபர்கள் மற்றும் என்ஜிஓக்கள் விண்ணப்பிக்கலாம் அல்லது விருதுகளுக்கு பரிந்துரைக்கப்படலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil