/indian-express-tamil/media/media_files/2025/04/28/zZChlGYoYLZyeySmr2Bp.jpg)
அரக்கோணம் அருகே ரயில் தண்டவாளத்தில் கற்கள், இரும்பு போல்ட் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேல்பாக்கம் வளைவு பகுதியில் 5 இடங்களில் தண்டவாளத்தில் கற்கள், இரும்பு போல்ட் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்ததையடுத்து ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகிறார்.
ரயிலை கவிழ்ப்பதற்கு சதியா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த வழியாக செல்ல இருந்த திருப்பதி - பாண்டிச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் இருந்து தப்பியது.
கடந்த சில நாட்களாக ரயில் தண்டவாளங்களில் கற்கள் ஜல்லிகள் கிடப்பதாக தகவல்கல் வெளியாகி வருகிறது. இந்நிலையில் இன்று அரக்கோணம் அருகே ரயில் தண்டவாளத்தில் கற்கள், இரும்பு போல்ட் வைக்கப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.