/indian-express-tamil/media/media_files/A7gVcRtWawofqAsd99zz.jpg)
சென்னையில் இன்றும் நாளையும் குடிநீர் நிறுத்தப்படும் பகுதிகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
சென்னையில் இன்றும் நாளையும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ஜூலை 12,13 ஆகிய தேதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
இது குறித்து சென்னை குடிநீர் வழங்கல், கழிவு நீரகற்று வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குடிநீர் எடுத்துச் செல்லும் பிரதான உந்து சாலையில் இணைப்புப் பணிகள் நடைபெற உள்ளன.
இதனால் ஜூலை 12 முதல் 13ஆம் தேதி மாலை 6 மணிவரை திரு.வி.க நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், ராயபுரம், திரு.வி.க நகர், அண்ணாநகர், கோடம்பாக்கம்,, சைதாப்பேட்டை, ஓட்டேரி, அயனாவரம், பெரம்பூர், செம்பியம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் குடிநீர் நிறுத்தப்படும். மேலும் தகவலுக்கு 044- 45674567 என்ற எண்ணை தொடர்புக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.