ஆம்ஸ்ட்ராங் கொலை; சமரசம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை அரசு உறுதி செய்ய வேண்டும்: நடிகர் விஜய்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையும் அளிப்பதாக நடிகரும், த.வெ.க தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையும் அளிப்பதாக நடிகரும், த.வெ.க தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
savagea

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை  செய்யப்பட்ட சம்பவம்  பெரும் அதிர்ச்சியையும் வேதனையும் அளிப்பதாக நடிகரும், த.வெ.க தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்து அறிக்கையை பகிர்ந்துள்ளார். “ பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
ஆம்ஸ்ட்ராங் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இது போன்ற கொடும் குற்றச் சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். சமரசம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று அதில் குறிப்பிட்டு இருந்தது. 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: