ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான 2 பேர் ஜாமீனில் விடுவிப்பு: எதிர்ப்பு தெரிவித்து பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் ஐகோர்ட்டில் மனு

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 2 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி சென்னை உயர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தார்.

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 2 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி சென்னை உயர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தார்.

author-image
WebDesk
New Update
Porkodi Armstrong HC

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 2 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி சென்னை உயர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தார்.

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், இந்த கொலை வழக்கில் சிறையில் உள்ள 2 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி சென்னை உயர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தார். 

Advertisment

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி அவருடைய வீட்டிற்கு அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏ1 குற்றவாளி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், பொன்னை பாலு உள்பட 27 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சம்போ செந்தில், மொட்டை கிருஷ்ணன் ஆகிய 2 பேர் வெளிநாட்டில் தலைமறைவாகி உள்ளதால் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த வழக்கை விசாரித்த செம்பியம் போலீசார், வழக்கின் குற்றப்பத்திரிகையை சென்னை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். தற்போது, இந்த வழக்கை சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி கார்த்திகேயன் விசாரித்து வருகிறார். 

இதற்கிடையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்ச நீதிமன்றமும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றிய உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தது.

Advertisment
Advertisements

இந்நிலையில், இந்த வழக்கில் சிறையில் உள்ள சதீஷ், சிவா ஆகியோர் சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன் 2 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் சி.பி.ஐ. விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என நீதிபதி நிபந்தனை விதித்தார்.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சதிஷ் மற்றும் சிவாவிற்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி, ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Chennai High Court

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: