Advertisment

'பேரறிவாளன் விடுதலை தொடர்பாக முதல்வரை சந்திக்கிறேன்' - அற்புதம்மாள்

ஒரு கோடி குடம் பாலை தலையில் ஊற்றியதை போல எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பேரறிவாளன் விடுதலை குறித்து அற்புதம்மாள்

பேரறிவாளன் விடுதலை குறித்து அற்புதம்மாள்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகள் பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

இந்நிலையில், தீர்ப்பு குறித்து வரவேற்பு தெரிவித்துள்ள பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 28வது ஆண்டாவது, உச்சநீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைப்பதாக கூறியது மகிழ்ச்சி அளிக்கிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா, இவர்களது விடுதலை தொடர்பாக இருமுறை அறிவித்தார். எனவே உடனடியாக தமிழக அரசு, எனது மகனை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன். முதல்வர் மற்றும் சட்டத்துறை அமைச்சரை இன்று அல்லது நாளை சந்தித்து, நான் கோரிக்கை விடுக்க உள்ளேன். அதுமட்டுமின்றி, விடுதலை தொடர்பாக ஆளுநரிடம் பரிந்துரை செய்யவும் கோரிக்கை விடுப்பேன்" என்று அற்புதம்மாள் தெரிவித்தார்.

நளினியின் தாய் பத்மா கூறுகையில், "ஒரு கோடி குடம் பாலை தலையில் ஊற்றியதை போல எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. 28 வருட காலம் அவர்கள் பட்ட ரணம் கொஞ்சமில்லை. ஒவ்வொரு நாளும் கண்ணீராக சிந்திக் கொண்டு இருந்தேன். புள்ளைங்க வரணும், புள்ளைங்க வரணும் என ஏங்கினேன். என் பிள்ளை மட்டுமல்ல 7 பிள்ளைகளும் வெளியே வர வேண்டும். 28 வருடம் சிறையில் வாடியுள்ளனர். இதைவிட வேறு ரணம் என்ன உள்ளது. இதைவிட தண்டனை என்ன உள்ளது?" என்று அவர் தெரிவித்துள்ளார்.

Perarivalan Arputhammal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment