Advertisment

ஆளுநரை நேரில் சந்தித்த அற்புதம்மாள்... மனுவை திருத்திய ஆளுநர்!

7 போ் விடுதலை விவகாரத்தில் தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தோம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பேரறிவாளன் விடுதலை குறித்து அற்புதம்மாள்

பேரறிவாளன் விடுதலை குறித்து அற்புதம்மாள்

ஆளுநரை சந்தித்த அற்புதம்மாள்: பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள், தமிழக பன்வாரிலால் ஆளுநர் புரோஹித்தை இன்று நேரில் சந்தித்து, 7 பேரை விடுவிக்கும் அரசின் பரிந்துரையை ஏற்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 போ் விடுதலை குறித்து தமிழக ஆளுநா் முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.

இதனைத் தொடா்ந்து 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்திற்கு பரிந்துரை செய்தது.

இந்நிலையில், பேரறிவாளனின் தாயாா் அற்புதம்மாள் இன்று தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்தாா்.

ஆளுநரை நேரில் சந்தித்த அற்புதம்மாள்

இதனைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில், 7 போ் விடுதலை விவகாரத்தில் தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தோம்.

மேலும் பேரறிவாளன் பரோலில் வெளியில் வந்த போது அவா் நடந்துகொண்ட விதம் உள்ளிட்டவை குறித்த ஆவணங்களை ஆளுநரிடம் சமர்ப்பித்தோம். ஆளுநா், தமிழக அரசின் பரிந்துரை மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நம்பிக்கை தொிவித்துள்ளாா்.

எனது கோரிக்கைகளை கனிவுடன் கேட்ட ஆளுநா் விரைவில் நல்ல முடிவை எடுப்பாா் என நம்புகிறேன். மனுவை அவரிடம் கொடுத்த பிறகு, அதனை வாங்கி அங்கேயே முழுமையாக படித்தார். அப்போது மனுவில் ஒரு பிழை இருந்ததை கண்டறிந்த ஆளுநர், அதை என்னை திருத்தச் சொல்லி வாங்கிக் கொண்டார்.

இதனால், கண்டிப்பாக உச்ச நீதிமன்றத்தை ஆளுநர் மதிப்பார், தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக் கொள்வார் என நம்புகிறேன்" என்று அற்புதம்மாள் தொிவித்துள்ளாா்.

Perarivalan Arputhammal Governor Banwarilal Purohit
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment