Advertisment

மேல்மா சிப்காட்டுக்கு எதிர்ப்பு: ஸ்டாலினை சந்தித்து மனு கொடுக்க வந்த அருள் உள்ளிட்ட 21 விவசாயிகள் கைது

மேல்மா சிப்காட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து மனு கொடுக்க சென்னை வந்த அருள் ஆறுமுகம் உள்ளிட்ட 21 விவசாயிகள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

author-image
WebDesk
New Update
arrest melma

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து மனு கொடுக்க சென்னை வந்த அருள் ஆறுமுகம் உள்ளிட்ட 21 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். Image Source: Facebook/ Arul Arumugam

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மேல்மா சிப்காட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து மனு கொடுக்க சென்னை வந்த அருள் ஆறுமுகம் உள்ளிட்ட 21 விவசாயிகள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். 

Advertisment

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க முயன்ற விவசாயிகள் தலைவர் அருள் ஆறுமுகம் மற்றும் 19 பெண்கள் உட்பட 21  விவசாயிகள் தடுத்து கைது செய்யப்பட்டனர். அவர்கள் சிங்காரத்தோட்டம் போலீஸ் குடியிருப்பில் உள்ள சமுதாயக்கூடத்தில் வைக்கப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே மேல்மா பகுதியில் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதைக் கைவிடக் கோரி போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், சென்னை தலைமைச் செயலகத்துக்குச் செல்வதற்கு முன்பே, இருவரை போலீஸார் உடல் ரீதியாகத் தாக்கியதாகக் குற்றம்சாட்டினர்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே மேல்மாவில் உள்ள விவசாய நிலங்களை தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக் கழகத்திற்காக (SIPCOT) கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அருள் உள்ளிட்ட விவசாயிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டம் குறித்து அருள் ஆறும்கம் தி நியூஸ் மினிட் இடம் கூறுகையில், “பிப்ரவரி 20-ம் தேதி, மேல்மா சிப்காட் இடத்தைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து 300 விவசாயிகள் அடங்கிய குழு முதலமைச்சரைச் சந்திப்பதற்காக சென்னைக்கு புறப்படத் தயாராகி வந்தனர். அப்போது, திருவண்ணாமலை போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, 5 பேர்களுக்கு மட்டும் முதல்வரை சந்திப்பதற்கு உறுதி உறுதியளித்தனர். அந்த நேரத்தில், 300 பேர் கொண்ட குழுவைச் சேர்ந்த 10 பேர் முதலமைசரை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் வரை உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

அப்போது, போலீசார் செய்ததெல்லாம் போராட்டக்காரர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதும், அவர்கள் குளுக்கோஸ் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதும்தான். அவர்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யாததால், நாங்கள் 23 பேரும் முதல்வரை நேரில் சந்தித்து மனு அளிக்க சென்னை வந்தோம். நாங்கள் செயலகத்தை அடைந்தவுடன் கைது செய்யப்பட்டோம். எங்களுக்கு முன்னால் தலைமைச் செயலகம் நோக்கிச் சென்ற மேலும் 2 பெரை அண்ணா சதுக்கம் பேருந்து நிறுத்தத்தில் போலீஸார் தடுத்து நிறுத்தி தாக்கினர். அவர்கள் மனு கொடுக்க சென்றார்களா என்று கேட்டு அவர்களைத் அடிதிருக்கிறார்கள்.” என்று அருள் தெரிவித்துள்ளார். 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் வளாகத்தை விரிவுபடுத்துவதற்காக மேல்மா, தேத்துறை, இளநீர்குன்றம், குறும்பூர், நர்மாபள்ளம், அத்தி, வீரம்பாக்கம் உள்ளிட்ட 11 கிராமங்களில்  உள்ள 2700 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அதைக் கண்டித்து அந்த கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள்  கடந்த 200 நாட்களுக்கும் மேலாக மேல்மா கூட்டுச் சாலையில் காத்திருப்புப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். 

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விவசாயிகளைப் போராடத்  தூண்டியதாகக் கூறி, அருள் மற்றும் 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பரவலான கண்டனத்திற்குப் பிறகு ஜனவரி மாதம் குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன. 

பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு சட்டசபையில், அருளுடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள் உண்மையில் விவசாயிகள் இல்லை என்றும் அவர்களுக்கு சொந்தமாக நிலம் இல்லை என்றும் கூறியுள்ளார். இந்த கூற்றுகளை மறுத்த அருள், தானும் விவசாயிகள் சங்கமும் மேல்மா சிப்காட் மற்றும் அமைச்சருக்கு எதிராக தங்கள் மனுவை அளிக்க முதல்வரை சந்திக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அருள் ஆறுமுகம் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “சென்னை தலைமை செயலகம் வந்து முதல்வரிடம் மனு அளிக்க வந்த 21 விவசாயிகளை(19 பெண்கள் 2 ஆண்கள்) கைது செய்து சிங்காரதோட்டம் , போலிஸ் கோட்ரஸ் , கம்யூனிட்டி ஹால், வண்ணாரப்பேட்டையில் கைது செய்து அடைத்துள்ளனர். 

முதல்வரை சந்திக்கும் வரை சென்னையை விட்டு திரும்ப மாட்டோம் என்று உறுதியோடு இருக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment