சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொதுக்கணக்காளர் அருண் கோயல் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். இதையடுத்து, அருண் கோயலை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
தமிழக அரசு துறைக்கு கணக்கு அலுவலர்களை நியமிப்பதில் லஞ்சம் பெற்றதாக மத்திய அரசு ஊழியர்கள் சங்கம் கொடுத்த புகாரின் பேரில், தேனாம்பேட்டையில் உள்ள பொதுக்கணக்காளர் அருண் கோயல் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.
பொதுக்கணக்காளராக அருண் கோயல் என்பவர் தமிழக அரசின் கணக்கு வழக்குகளை தணிக்கை செய்யும் அதிகாரியாக இருந்து வருகிறார். இந்நிலையில், அவர் மீதான ஊழல் புகாரின் அடிப்படையில் ஆவணங்களை கைப்பற்றி சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின.
சோதனையைத் தொடர்ந்து, அருண் கோயலை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.