அருந்ததியர் உள்ஒதுக்கீடு விவகாரம்: தொண்டர்களுக்கு திருமாவளவன் முக்கிய உத்தரவு

வி.சி.க மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அவர்கள், உள்ஒதுக்கீட்டுக்கு எதிராக பேசும் இயக்கங்களையோ, தலைவர்களையோ கண்டித்ததில்லை- திருமாவளவன்

வி.சி.க மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அவர்கள், உள்ஒதுக்கீட்டுக்கு எதிராக பேசும் இயக்கங்களையோ, தலைவர்களையோ கண்டித்ததில்லை- திருமாவளவன்

author-image
WebDesk
New Update
thirumavalavan

அருந்ததியர் உள்ஒதுக்கீடு தொடர்பான விமர்சனங்களுக்கு வி.சி.கவினர் யாரும் எதிர் வினையாற்ற வேண்டாம் என தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவரும், எம்.பியுமான திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார். 

Advertisment

இதுதொடர்பாக நேற்று முகநூல் நேரலையில் பேசிய அவர், "அருந்ததியர்களுக்கான உள்ஒதுக்கீட்டை தேசிய அளவில் அணுகுகிறோம். இடஒதுக்கீடு தொடர்பாக விசிக எத்தகைய நிலைப்பாட்டை எடுத்துள்ளது, போராடி வருகிறது என்பதை அரசியல் களத்தில் உள்ள அனைவரும் நன்கு அறிவர்.

இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் உள்ள சிலகுறைபாடுகள் குறித்து தெளிவு பெறவே சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளோம். சீராய்வு மனுவில் தமிழக அரசை சேர்க்கவில்லை.

ஆனால், உள்ஒதுக்கீட்டை எதிர்ப்பதாக வி.சி.கவுக்கு எதிரான அவதூறுகளை சிலர் பரப்புகின்றனர். வி.சி.கவை கண்டித்து ஒரு சில பட்டியலின அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களை அறிவித்துள்ளன.

Advertisment
Advertisements

வி.சி.க மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அவர்கள், உள்ஒதுக்கீட்டுக்கு எதிராக பேசும் இயக்கங்களையோ, தலைவர்களையோ கண்டித்ததில்லை, விமர்சித்ததுமில்லை, ஆர்ப்பாட்டமும் நடத்தியதில்லை.  

ஏனென்றால் அவர்கள் எல்லாம் சங்பரிவார்களோடு கைகோர்த்திருக்கின்றனர். எனவே, இதுதொடர்பாக வி.சி.கவினர் யாரும் எதிர்வினையாற்ற வேண்டாம்" என்று திருமாவளவன் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: