/tamil-ie/media/media_files/uploads/2020/10/New-Project-2020-10-07T204734.248.jpg)
பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனுக்கு சொந்தமான சுமார் ரூ.2,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வருமானவரித்துறை முடக்கியுள்ளது.
2017ம் ஆண்டு சசிகலாவுக்குச் சொந்தமான சிறுதாவூர் பங்களா உள்ளிட்ட தமிழகம் முழுவதிலும் உள்ள 187 இடங்களில் வருமான வரித்துறை சோதனை ஒரே நேரத்தில் அதிரடியாக சோதனை நடத்தியது. இந்த தனையில், கணக்கில் வராத ரூ.5 கோடி பணம் ஏராளமான ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக தெரிவிக்கப்பட்டது.
வருமானவரித்துறை சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் 1,600 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியது.
இதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் வருமான வரித்துறை இதில் சம்பந்தப்பட்ட பல்வேறு பினாமிகளை அடையாளம் கண்டு அவர்களிடம் இருந்து 2வது முறையாக சுமார் ரூ.300 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது.
இந்த நிலையில், சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான ரூ. 2,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பினாமி பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை முடக்கியுள்ளது. சிறுதாவூர் பங்களாவில் வருமானவரித்துறை நோட்டீஸ் ஒட்டியுள்ளது.
வருமானவரித்துறை சிறுதாவூர் பங்களா, கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட சொத்துக்களை முடக்கியுளது. வருமான வரித்துறையால் முடக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு சுமார் ரூ. 2,000 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.