Advertisment

கரூர் ஐ.டி ரெய்டில் அதிகாரிகளை தடுத்த விவகாரம்: தி.மு.கவினர் 8 பேர் கைது

கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகளை சோதனை செய்ய விடாமல் தடுத்தும், தாக்குதல் நடத்திய விவகாரத்திலும் தி.மு.கவினர் 8 பேர் கைது

author-image
WebDesk
New Update
Karur

தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. 3-வது நாளாக இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது.

Advertisment

சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது. செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. ஆனால், செந்தில் பாலாஜி இல்லங்களில் சோதனை ஏதும் நடைபெற வில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் ஐடி சோதனை நடைபெறும் தகவலை அறிந்த அவரது ஆதரவாளர்கள் அதிகாரிகளை சோதனை செய்யவிடாமல் தடுத்து உள்ளனர். அவர்களின் கார் கண்ணாடியை சேதப்படுத்தினர். மேலும் அதிகாரிகளை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த 4 அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். 6 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வரும் நிலையில் ராயனூர் பகுதியில் அதிகாரிகளை தடுத்து நிறுத்திய புகாரில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

V Senthil Balaji
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment