Advertisment

சென்னை விமான நிலையத்தில் வேகமெடுக்கும் சரக்குகள் கையாளும் பணி; புதிதாக இணைந்த 2 ஏஜென்ஸிகள்

சென்னை விமான நிலையத்தில் சரக்குகளை கையாளும் பணி விரைவாக நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
chennai airport, chennai, chennai news, airports authority of india, சென்னை விமான நிலையம், வேகமெடுக்கும் சரக்குகள் கையாளும் பணி, புதிதாக சேர்ந்த 2 ஏஜென்ஸிகள், Tamil indian express news

செலிபி ஏர்போர்ட் சர்வீசஸ் இந்தியா மற்றும் குளோப் கிரவுண்ட் இந்தியா ஆகிய இரண்டு புதிய ஏஜென்சிகள் பணிகளின் பொருட்கள், சரக்குகளைக் கையாளும் பணியை ஜனவரி இறுதிக்குள் சென்னை விமான நிலையத்தில் தங்கள் செயல்பாடுகளைத் தொடங்க உள்ளன.

Advertisment

இந்திய விமான நிலைய ஆணையம் கூடுதலாக இரண்டு சரக்குகளைக் கையாளும் நிறுவனங்களை உலகளாவிய டெண்டர் மூலம் நியமித்துள்ளதால், சென்னை விமான நிலையத்தில் சரக்குகள் செயலாக்கம் விரைவாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகாரிகளின் கருத்துப்படி, செலிபி ஏர்போர்ட் சர்வீசஸ் இந்தியா மற்றும் குளோப் கிரவுண்ட் இந்தியா ஆகிய இரண்டு புதிய ஏஜென்சிகள் ஜனவரி இறுதிக்குள் சென்னை விமான நிலையத்தில் தங்கள் செயல்பாடுகளைத் தொடங்க உள்ளன.

இரண்டு நிறுவனங்களும் இந்தியாவில் வலுவான தளத்தைக் கொண்டிருப்பதாகவும், தற்போது டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற முக்கிய விமான நிலையங்களில் செயல்படுவதாகவும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏஜென்சிகள் தற்போதுள்ள ஏஜென்சியுடன் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் செயல்படும் பல்வேறு விமான நிறுவனங்களுக்கு சரக்குகளைக் கையாளும் சேவைகளை வழங்கும்.

இந்த இரண்டு ஏஜென்சிகளையும் சேர்த்துக் கொள்வதன் மூலம் விமான நிலையத்தின் செயல்பாட்டுத் திறன் மற்றும் கையாளும் திறன் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

“கூடுதலாக இந்த இரண்டு ஏஜென்ஸிகளின் தூண்டுதலுடன், பயணிகள் மற்றும் அவர்களின் சாமான்களைக் கையாள அதிக ஊழியர்கள் மற்றும் உபகரணங்களுடன் பயணிகள் மற்றும் சாமான்கள் செயலாக்க நேரம் கணிசமாகக் குறையும்” என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 2 ஏஜென்ஸிகள் தரத்தை மேம்படுத்தி வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும், பல்வேறு நிலைகளில் பல கட்டங்களாக 4,000 பேருக்கு மேல் பணியமர்த்த திட்டமிட்டுள்ளனர்.

ஒழுங்குமுறை நடைமுறைகளை முடித்த பிறகு, இந்த ஏஜென்சிகள் ஜனவரி இறுதிக்குள் தங்கள் செயல்பாடுகளைத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தின் முதல் கட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Chennai Chennai Airport
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment