/indian-express-tamil/media/media_files/iURZWRJGkuYIlNwKXp4a.jpg)
நீதிமன்றம்
கிராம சபை கூட்டத்தில் விவசாயியை தாக்கிய ஊராட்சி செயலாளருக்கு முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீவல்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளையார்குளம் ஊராட்சியில் மான்ராஜ் எம்.எல்.ஏ முன்னிலையில் கிராம சபை கூட்டம் நடைபெற்ற போது செயலாளர் தங்கப்பாண்டியன், விவசாயி அம்மையப்பனை காலால் எட்டி உதைத்தார். இந்த சம்பவம் அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவின்படி தங்கபாண்டியனை வட்டார வளர்ச்சி அதிகாரி மீனாட்சிபணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் அம்மையப்பன் கொடுத்த புகாரின்பெயரில் ஊராட்சி செயலாளர் தங்கப்பாண்டியன் மீது வன்னியம்பட்டி போலிசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து முன்ஜாமின் கேட்டு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தங்கப்பாண்டியன் நேற்று மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தாக்கப்பட்ட விவசாயிக்கு வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லாததால் தங்கப்பாண்டியனுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வாரத்தில் ஒருநாள் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.