/tamil-ie/media/media_files/uploads/2017/12/z971.jpg)
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி 40 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்தாக அருள்மொழி என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், ஏற்கனவே இதை போன்று கணேஷ்குமார் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த உண்மையை மறைத்து அருள்மொழி சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த
புகார் அரசியல் உள்நோக்கம் மற்றும் பழிவாங்கும் நோக்கோடு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என அமைச்சர் மனுவில் கோரியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.