சென்னையில் பக்ரீத் பண்டிகையை ஒட்டி, ஒட்டகங்களை பழி கொடுத்து குர்பானி அளிக்கும் நிகழ்வுக்கு தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.
Greater Chennai Corporation COP Sh Mahesh Kumar banned transportation and slaughter of Camels and Cows for Bakrid.@chennaipolice_
கொரோனா பெருந்தொற்றை சந்தித்து வரும் சூழலில், பக்ரீத் பண்டிகையின்போது, பொது இடங்களில் விலங்குகளை பலியிட அனுமதிக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, ஒட்டகங்களை வெட்டுவதற்கு தகுந்த இடங்கள் சென்னையில் இல்லை என்பதால் அவற்றை வெட்டுவதற்கு கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
மேலும், சென்னையில் தடையை மீறி ஓட்டகம் வெட்டப்படாமல் இருப்பதை காவல்துறையினர் உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.
தியாகத் திருநாள் அல்லது பக்ரித் பண்டிகை, உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும்.