பக்ரீத் பண்டிகை: ராமநாதபுரம் வாரச் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

பக்ரீத் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், ராமநாதபுரத்தில் இன்று வார ஆட்டு சந்தை நடைபெற்றது. காலை துவங்கிய ஆட்டுச் சந்தையில் 2 மணி நேரத்தில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

பக்ரீத் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், ராமநாதபுரத்தில் இன்று வார ஆட்டு சந்தை நடைபெற்றது. காலை துவங்கிய ஆட்டுச் சந்தையில் 2 மணி நேரத்தில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ramanadhapuram goat sale

பக்ரீத் பண்டிகை: ராமநாதபுரம் வாரச்சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

பக்ரீத் பண்டிகை வருகிற 7-ந் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு ராமநாதபுரம் ஆட்டுசந்தைக்கு இன்று ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. பல ஊர்களில் இருந்தும், கிராமங்களில் இருந்தும் சரக்கு வாகனங்களில் ஆடுகள் கொண்டு வரப்பட்டன. ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், மதுரை, காரைக்குடி,  உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

Advertisment

வழக்கத்தை விட இன்று ஆடுகளின் விலை கடுமையாக உயர்ந்திருந்தது. வழக்கமாக 15 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட ஆடு ரூ.25 ஆயிரத்திற்க்கும், 20 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட ஆடுகள் ரூ 30 ஆயிரத்திற்கும் விற்பனையானது. திருமண காலம் என்பதாலும், பக்ரீத் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்கள் உள்ளதாலும் ஆடுகளின் விலை உயர்ந்துள்ளது. 

இன்று காலை துவங்கிய ஆட்டுச் சந்தையில் 2 மணி நேரத்தில் ரூ.3 கோடி விற்பனையானது. தொடர்ந்து ஆட்டுச் சந்தை நடந்து வரும் நிலையில் சந்தை முடிவடையும்போது ரூ.5 கோடிக்கு மேல் வரை  ஆடுகள் விற்பனையாக வாய்ப்புள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Ramanathapuram

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: