பெங்களூருவில் உள்ள ரமேஷ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குண்டுவெடிப்புக்கு பிறகு மேற்கு வங்கத்தில் தலைமறைவாக இருந்த முசாவிர் ஹுசைன் ஷாசிப், அப்துல் மதின் தாஹா ஆகிய 2 பேரை என்.ஐ.ஏ கைது செய்தது.
முன்னதாக வெண்டிகுண்டு தயாரிப்பதற்கான தளவாடங்களை சப்ளை செய்த முஸாமில் ஷெரீஜப் என்பவர், கடந்த மார்ச் 27ம் தேதி கைது செய்யப்பட்டார். ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் என்.ஐ.ஏ இதுவரை 3 பேரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் 2 பேரை காவல்துறையினர் மேற்கு வங்கத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“