/indian-express-tamil/media/media_files/uDRNjrxGXUd0kE5sMtRg.jpg)
பெங்களூரு ஓட்டல் குண்டு வெடிப்பு தொடர்பாக கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள மருத்துவர்கள் இல்லத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
Coimbatore: கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஜாபர் இக்பால், நயின் சித்திக் ஆகிய இருவரும் சாய்பாபா காலனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக இருந்து வருகின்றனர். இதில், நயின் சித்திக் இரண்டு ஆண்டுகள் பயிற்சி முடித்துள்ள நிலையில், ஜாபர் இக்பால் இரண்டாவது ஆண்டாக பயிற்சி பெற்று வருகிறார்.
/indian-express-tamil/media/post_attachments/0845f4fd-97c.jpg)
இந்நிலையில், இன்று காலை இவர்கள் தங்கியுள்ள வீடுகளில் சென்னையைச் சேர்ந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். கோவை போலீசார் உதவியுடன் சாய்பாபா காலனியில் சுப்பண்ண கவுண்டர் வீதி, நாராயண வீதி ஆகிய இடங்களில் சோதனை நடத்திய தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் ஒரு மணி சோதனைக்கு பின்னர் கிளம்பினர். தனியார் மருத்துவமனையிலும் இருவர் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி சென்றனர்.
/indian-express-tamil/media/post_attachments/a51bcc66-179.png)
பெங்களூரு ஓட்டல் குண்டு வெடிப்பு தொடர்பாக, கர்நாடக மாநில தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரில் சென்னையிலிருந்து வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கோவை போலீசார் துணையுடன் இந்த சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us