/tamil-ie/media/media_files/uploads/2022/07/image.jpg)
அதிமுகவின் வங்கி கணக்குகளைக் கையாள புதிய பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு முழு அதிகாரம் என்ற எடப்பாடி பழனிசாமியின் கடிதத்தை வங்கிகள் ஏற்றுக் கொண்டுள்ளன. இந்நிலையில் ஓபிஎஸ் கடிதத்தை வங்கிகள் நிராகரித்துள்ளன.
சென்னை வானகரத்தில் ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச் செயலாளராகவும், திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என ஓபிஎஸ் தெரிவித்தார். இந்தியன் வங்கிகளில், கேவிபி வங்கியில் அதிமுக கட்சிக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகள் உள்ளன. இந்நிலையில் அதிமுக பொருளாளராகத் திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்தது குறித்து கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி கடந்த 12-ம் தேதி வங்கிகளுக்குக் கடிதம் அனுப்பினர். அந்த கடிதத்தில், வங்கி வரவு, செலவு உள்ளிட்ட நடவடிக்கைகளைத் திண்டுக்கல் சீனிவாசன் கையாள்வார். மேலும் காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தையும் அவரே பார்த்துகொள்வார் எனக் குறிப்பிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வமும் அதிமுக கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு கடிதம் அனுப்பினார். இதில் “என்னைக் கேட்காமல் வங்கி வரவு, செலவு கணக்குகளை யாரிடமும் ஒப்படைக்கக் கூடாது. நான்தான் கட்சியின் பொருளாளராகத் தொடர்கிறேன். கட்சியின் விதிகளை மீறி நடைபெற்ற பொதுக்குழுவில் புதிய பொருளாளராகத் திண்டுக்கல் சீனிவாசனை நியமனம் செய்தது செல்லாது. மேலும் இது தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்திடம் நிலுவையில் உள்ளது. எனவே அதிமுக வங்கிக் கணக்குகளை முடக்கி வைக்க வேண்டும். இல்லையென்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஓபிஎஸ் கடிதத்தில் போதுமான ஆதாரங்கள் இல்லை என கூறி வங்கிகள் நிராகரித்துள்ளது. இந்நிலையில் வங்கிகள் ஓ. பன்னீர் செல்வத்தின் கடிதத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.