New Update
/indian-express-tamil/media/media_files/PtZqHm0lOYZgvmoSODYL.png)
அதிமுக புரட்சித் தமிழர் அணி என்ற பெயரில் நாமக்கல்லில் நாமக்கல்லில் வைக்கப்பட்டுள்ள பேனர்.
அதிமுக புரட்சித் தமிழர் அணி என வைக்கப்பட்டுள்ள போஸ்டர்கள் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. அதிமுகவில் பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயரில் ஏற்கனவே அணிகள் செயல்படுகின்றன.
அதிமுக புரட்சித் தமிழர் அணி என்ற பெயரில் நாமக்கல்லில் நாமக்கல்லில் வைக்கப்பட்டுள்ள பேனர்.
edappadi-k-palaniswami | அ.தி.மு.க.வில் மகளிர் அணி, இளைஞர் இளம்பெண்கள் பாசறை, மாணவர் அணி, மீனவர் அணி, விவசாயிகள் அணி, தகவல் தொழில்நுட்ப அணி என பல்வேறு அணிகள் உள்ளன.
இது தவிர, எம்.ஜி.ஆர் மன்றம், ஜெயலலிதா பேரவை ஆகியவையும் தொடர்ந்துவருகின்றன.
இந்த நிலையில் கட்சியின் தற்போதைய பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி படத்துடன் புரட்சித் தமிழர் என்ற பெயரில் புதிய அணியின் பெயர் அச்சிடப்பட்டு நாமக்கல்லில் போஸ்டர் வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் போஸ்டரை கீழ்பாலப்பட்டியைச் சேர்ந்த கோபிநாத் என்ற அதிமுக பிரமுகர் வைத்துள்ளார். அந்தப் போஸ்டரில், “புரட்சித் தலைவர் புரட்சித் தலைவியின் அரசியல் வாரிசே புரட்சித் தமிழரே' என அச்சிடப்பட்டுள்ளது.
மேலும் அதில், புரட்சி தமிழர் பேரவை என்று எழுதப்பட்டுள்ளது. போஸ்டரில் உள்ள படத்தில் பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி படங்கள் உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.