டெல்லி சென்று திரும்பிய 364 பேருக்கு தமிழகத்தில் கொரோனா உறுதி: அரசு தகவல்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 411 பேர்களில், 364 பேர் டெல்லி மாநாட்டிற்கு பங்கேற்று திரும்பியவர்கள் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 411 பேர்களில், 364 பேர் டெல்லி மாநாட்டிற்கு பங்கேற்று திரும்பியவர்கள் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
beela rajesh today press meet corona in tamil nadu 411 cases
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 411 பேர்களில், 364 பேர் டெல்லி மாநாட்டிற்கு பங்கேற்று திரும்பியவர்கள் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
Advertisment
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், "தமிழகத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 100 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள். ஒருவர் அமெரிக்கா சென்று வந்தவர். மற்றொருவரின் விவரம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் மூலமாக ஏற்கெனவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 309 ஆக இருந்த நிலையில், தற்போது 411 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்கள் 364 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் கொரோனா பரவல் நிலையில் 2 ஆம் கட்டத்தில்தான் உள்ளது. இன்னும் சமூகப் பரவல் நிலையை எட்டவில்லை. எனினும், கொரோனா பரவலைத் தடுக்க மக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் 1200 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே 90, 412 பேர் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர்" என்று தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 81 பேருக்கும், நெல்லையில் 36 பேருக்கும், ஈரோட்டில் 32 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதேபோல், தமிழகத்தில் கொரோனா சோதனைக்கு அனுப்பப்பட்ட 484 பேரின் மாதிரிகள் ஆய்வில் உள்ளன என அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
"தமிழகத்தில் இதுவரை சோதிக்கப்பட்டவர்கள் 2 லட்சத்து 10 ஆயிரத்து 538 பேர்.
உள் சிகிச்சையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர் 23 ஆயிரத்து 689 பேர். வென்டிலேட்டர் சிகிச்சையில் உள்ளவர்கள் 3,396 பேர். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 1,580 பேர். ஆய்வுக்காக மாதிரிகள் எடுக்கப்பட்டது 3,684. கொரோனா இல்லை என அறியப்பட்டது 2,789 பேர். கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது 411 பேர்.
உடல் நலம் தேறியவர்கள் (Discharged) 7 பேர், ஆய்வுக்காக அனுப்பப்பட்ட மாதிரிகள் முடிவுக்காக காத்திருப்பது 484 பேர்" என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil