Advertisment

கணேசா போய்விடு, விநாயகா போய்விடு : பாகுபலி யானையை அன்பாக விரட்டிய மூதாட்டி ; வைரல் வீடியோ

பாகுபலி காட்டு யானை சமயபுரம் சாலையைக் கடந்து எதிர்பாராத விதமாக அருகே உள்ள மக்கள் நடமாட்டம் உள்ள வீதிக்குள் நுழைந்தது

author-image
WebDesk
New Update
Ganesah Elephant

பாகுபலி யானை

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட நெல்லிமலை வனப்பகுதியில் காட்டு யானை மற்றும் பிற வனவிலங்குகளின்  நடமாட்டம் காணப்படுகிறது. அடர்ந்த வனப்பகுதியில் உணவு மற்றும் நீர்நிலைகளை தேடி அலையும் காட்டு யானைகள் இரவு நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமங்களில் உள்ள தோட்டங்களில் புகுந்து விவசாய விளைபொருள்களை சேதப்படுத்தி வருகிறது.

Advertisment

தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் வனப்பகுதியில் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக காட்டு யானை மற்றும் பிற வனவிலங்குகள் வனப்பகுதியில் இடம்பெயர்ந்து செல்வது அதிகமாக காணப்படுகிறது. அந்த வகையில், நேற்று நள்ளிரவு நெல்லிமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி காட்டு யானை சமயபுரம் சாலையைக் கடந்து எதிர்பாராத விதமாக அருகே உள்ள மக்கள் நடமாட்டம் உள்ள வீதிக்குள்  நுழைந்தது

அப்போது வீடுகளுக்கு முன் ஆங்காங்கே  நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்திற்கு நடுவே காட்டு யானை பாகுபலி புகுந்து சென்றபோது அதனை பார்த்த மூதாட்டி ஒருவர் வீட்டின் மாடியில் நின்று கொண்டு கணேசா போய்விடு  விநாயகா போய்விடு என்று குரல் எழுப்பிய நிலையில் மூதாட்டியின் பேச்சுக்கு கட்டுப்பட்டு ஆடி அசைந்தபடி வாகனங்களை சேதப்படுத்தாமல் காட்டு யானை அங்கிருந்து வெளியேறி  கல்லார் வனப்பகுதிக்கு சென்றது.

சமயபுரம் கிராமத்தில் வழக்கமாக காட்டு யானை பாகுபலி செல்லும் வலசை பாதை அடைக்கப்பட்டதால் தற்போது கிராமங்களுக்கும் குடியிருப்புகளுக்கும் நோக்கி நடமாட தொடங்கி இருப்பது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

coimbotore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment