மறைந்த பின்னணி பாடகி பவதாரணியின் உடல் இலங்கையில் இருந்து இன்று மதியம் 3.30 மணி அளவில் சென்னைக்கு கொண்டுவரப்பட உள்ளது.
2000ம் ஆண்டு வெளியான பாரதி படத்தில் இவர் பாடிய ” மயில் போல பொண்ணு ஒண்ணு” பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது. 1984ம் ஆண்டு வெளியான ’மை டியர் குட்டிச் சாத்தான்’ மலையாள படத்தில் உள்ள ’திதிதே தாளம்’ பாடலின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானவர். தொடர்ந்து ராசய்யா, அலெக்சாண்டர், தேடினேன் வந்தது, காதலுக்கு மரியாதை, அழகி, பிரண்ட்ஸ் , தாமிரபரணி, உளியின் ஓசை, கோவா, மங்காத்தா, அனேகன் உள்ளிட்ட பல்வேறு படத்தில் அவர் பாடி உள்ளார்.
அமரிதம், இலக்கணம், மாயநதி, பிர் மிலேங்கே படங்களுக்கும் அவர் இசையமைத்துள்ளார். இவர் கடந்த 5 மாதங்களாக புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஆயுர்வேத சிகிச்சைக்காக பவதாரணி இலங்கைக்கு அவரது குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனிக்காமல் உயிரிழந்தார்.
இந்நிலையில் அவரது உடல் இன்று மதியம் 3.30 மணிக்கு சென்னைக்கு கொண்டுவரப்பட உள்ளது. தியாகராயர் நகர் முருகேசன் சாலையில் உள்ள இளையராஜாவின் இல்லத்தில் பவதாரணியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“