Advertisment

போகி கொண்டாட்டம்: சென்னையில் காற்று மாசு; விமான சேவை பாதிப்பு

பழைய பொருட்ளை எரித்து போகிப் பண்டிகை கொண்டாடிய மக்கள். சென்னையில் கடும் புகை மூட்டம். விமான சேவை பாதிப்பு

author-image
WebDesk
New Update
Bhogi
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ்நாட்டில்  போகிப் பண்டிகை இன்று (ஜன.14) உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற பழமொழிக்கு ஏற்ப மக்கள் காலை முதலே போகிப் பண்டிகை கொண்டாடி வருகின்றனர். மேள தாளங்கள் அடித்து பழைய பொருட்ளை எரித்து மக்கள் கொண்டாடி வருகின்றனர். 

Advertisment

சென்னையில் பல்வேறு பகுதிகளில் போகி கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் இன்று காலையில்  கடும் புகை மூட்டம் ஏற்பட்டது. வழக்கத்தை விட புகை மூட்டம் அதிகரித்ததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர். 

தொடர்ந்து சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வில் தெரிவித்தது. சென்னையில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. நகர் முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளதால் சென்னை மணலி பெருங்குடியில் 277 என்ற அளவில் மோசமான அளவில் உள்ளது. எண்ணூர், அரும்பாக்கம், ராயபுரம், கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் காற்றின் தரக்குறியீடு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், பனி மற்றும் போகிப் பண்டிகை புகைமூட்டம் காரணமாக சென்னையில் பல்வேறு விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. சென்னை நகர் முழுவதும் புகைமூட்டமாக உள்ளதால் விமான நிலையத்தில் விமான புறப்பாடு மற்றும் தரையிறங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. 

சிங்கப்பூர், லண்டன் விமானங்கள் சென்னையில் தரை இறங்க முடியவில்லை. ஹைதராபாத்துக்கு விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. தற்போது சென்னை விமான நிலையத்தில் 16 உள்நாட்டு விமான சேவைகள் மற்றும் 8 வெளிநாட்டு விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. புகைமூட்டம் சீரான பிறகு விமான சேவைகள் சீராகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil 

Chennai Airport
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment