/tamil-ie/media/media_files/uploads/2022/09/Untitled-design-12.jpg)
Chennai Tamil News: சென்னை பைக் சாகசத்தில் ஈடுபட்ட இன்ஸ்டாகிராம் பிரபலங்களை போலீசார் கைது செய்தனர், ஒருவரை பிடிக்க தனிப்படை போலீசார் நியமித்துள்ளார்கள்.
சமூக வலைத்தளங்களில் பைக் வீலிங் வீடியோ வைரலாக பரவியதை கண்காணித்த பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார், திருப்பத்தூர் மாவட்டம் மாம்பூரை சேர்ந்த மொகமது ஹாரிஸ் மற்றும் மொகமது சாய்பான் ஆகியோரை கைது செய்தனர். இருவரும் கல்லூரி மாணவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர்களின் ஒருவரான அலெக்ஸ் பினோயை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்ததுள்ளனர். இவ்விவகாரத்தில், 2 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டதனால் போலீஸ் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இவ்வாறு காவல்துறையின் கடும் கட்டுப்பாட்டை மீறியும் நகரில் பைக் வீலிங் சாகசம் மற்றும் பல்வேறு சாலை விதிமீறல் ஏற்படுவதால் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை என சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.