ஓசூர் அருகே கடையில் பிரியாணி சாப்பிட்ட வாலிபர் மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஓசூரில் தனியாக வீடு எடுத்து தங்கி வந்துள்ளார் அருண்குமார். இவர் பர்னிச்சர் விற்பனை செய்யும் கடையில் வேலை செய்து வருகிறார். இந்நிலயில் அவர் நண்பர்களுடன் பிரியாணி சாப்பிட்டுள்ளார். பிரியாணி சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவருக்கு வாந்தி வந்துள்ளது. தொடர்ந்து அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால், அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இந்நிலையில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.