குண்டாசில் சிறை; லண்டன் பணம்... செல்வப் பெருந்தகையை கோர்ட்டில் சந்திக்க தயார்: அண்ணாமலை

லண்டனில் செல்வப் பெருந்தகை முதலீடு செய்த பணம் பற்றி வெளியே கொண்டு வர்றேன், எதையும் விட மாட்டேன் என்று அண்ணாமலை ஆவேசம்

லண்டனில் செல்வப் பெருந்தகை முதலீடு செய்த பணம் பற்றி வெளியே கொண்டு வர்றேன், எதையும் விட மாட்டேன் என்று அண்ணாமலை ஆவேசம்

author-image
WebDesk
New Update
annam SELVA

குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு வெளியில் வந்த ஒருவர் கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கிறார் என்றால் அது செல்வப் பெருந்தகை தான் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விமர்சனம். 

Advertisment

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "பா.ஜ.கவில் ரவுடிகள் சேர்கிறார்கள் என செல்வப் பெருந்தகை கூறினார். அப்போது அவருடைய வரலாற்றை சொல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்து வெளி வந்து காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவராக இருக்கிறார் என்றால் அது செல்வப் பெருந்தகை தான். 

செல்வப் பெருந்தகை மீது குண்டாஸ் சட்டம் போட்டது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. ஆனால் இதற்கு இன்று ஆர்.எஸ்.எஸ், மத்திய அரசு காரணம் என்று கூறுகிறார்கள். செல்வப் பெருந்தகையை கோர்ட்டில் சந்திக்க தயார். லண்டனில் நீங்கள் முதலீடு செய்த பணம் எல்லாவற்றையும் நான் வெளியே கொண்டு வர்றேன். எதையும் விட மாட்டேன்" என்று கூறினார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: