Advertisment

'அண்ணாமலையை மிரட்டுவதா? முடிந்தால் எங்கள் மேடைக்கு வந்து பாருங்கள்!' கீதா ஜீவனுக்கு பா.ஜ.க சவால்

தி.மு.க அமைசர்களை விமர்சனம் செய்ததற்காக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை மிரட்டுவதா, முடிந்தால் எங்கள் மேடைக்கு வந்து பாருங்கள் என்று அமைச்சர் கீதா ஜீவனுக்கு பா.ஜ.க மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி சவால் விடுத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
'அண்ணாமலையை மிரட்டுவதா? முடிந்தால் எங்கள் மேடைக்கு வந்து பாருங்கள்!' கீதா ஜீவனுக்கு பா.ஜ.க சவால்

தி.மு.க-வை விமர்சிப்பதை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும், இல்லையேல், உங்கள் மேடைகளில் ஏறுவோம் என அமைச்சர் கீதா ஜீவன் எச்சரிக்கை விடுத்து பேசிய நிலையில், முடிந்தால் எங்கள் மேடைக்கு வந்து பாருங்கள் என்று பா.ஜ.க நாராயணன் திருப்பதி சவால் விடுத்துள்ளார்.

Advertisment

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடர்ந்து தி.மு.க-வையும் தி.மு.க அமைச்சர்களையும் தி.மு.க அரசையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். அண்மையில், பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு முட்டையில் அழுகிய முட்டைகள் இருப்பதாகவும் அதனால், அந்த துறையின் அமைச்சர் கீதா ஜீவன் அழுகிய முட்டை அமைச்சர் என்று அழைக்க வேண்டும் என்று கடுமையாக விமர்சித்து இருந்தார். இதற்கு அமைச்சர் கீதா ஜீவனும் கடுமையாக பதிலடி கொடுத்து பேசியிருந்தார்.

கோவில்பட்டியில் நடைபெற்ற தி.மு.க பொதுக்கூட்டத்தில் பேசிய கீதா ஜீவன், இத்துடன் அண்ணாமலை நிறுத்திக்கொள்ள வேண்டும், இல்லையேல், உங்கள் மேடைகளை நாங்கள் ஏறுவோம் என்று எச்சரிக்கை விடுத்துப் பேசியிருந்தார்.

இந்த நிலையில், “சட்டம் - ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய அமைச்சர் கீதா ஜீவன், கடமை தவறி சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் தொனியில் பேசியுள்ள நிலையில், அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும். மேலும், பொது வெளியில் பொறுப்புள்ள கட்சித் தலைவர் ஒருவரை மிரட்டிய குற்றத்திற்காக கைது செய்யப்பட வேண்டும்" என்று பா.ஜ.க மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பா.ஜ.க மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழகத்தின் அமைச்சர் கீதா ஜீவன் பொதுக்கூட்டம் ஒன்றில் பாஜக தலைவர் அண்ணாமலையை ஒருமையில் பேசியதோடு, "சூடு, சொரணை இருந்தால் என் தலைவர் குறித்தும், ஒவ்வொரு அமைச்சர் குறித்தும் பேசுவதை நிறுத்திக் கொள். இல்லையேல் நீ பேசிக்கொண்டிருக்கும்போதே மேடையில் ஏறுவோம்” என்று மிரட்டல் விட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அதிகார மமதையில் ஒரு அமைச்சர், அரசியல் கட்சி தலைவர் ஒருவரை மேடையில் ஏறி தாக்குவோம் என்று கூறியிருப்பது தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை சீர்குலைத்து கொண்டிருப்பதற்கு காரணம் ஆளும் கட்சியும், அமைச்சர்களும்தான் என்பதை தெளிவுபடுத்துகிறது. ஏற்கெனவே, சில அமைச்சர்களும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும் அண்ணாமலைக்கு கொலை மிரட்டல் விடுத்ததை கண்டுகொள்ளாத தமிழக அரசு, காவல்துறை மற்றும் தமிழக முதல்வர் பெண் அமைச்சரின் இந்த பேச்சுக்கு கைகட்டி, வாய் பொத்தி மவுனம் காப்பது முறையல்ல.

சட்டம் - ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய அமைச்சர் கீதா ஜீவன், கடமை தவறி சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் தொனியில் பேசியுள்ள நிலையில், அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும். மேலும், பொது வெளியில் பொறுப்புள்ள கட்சித் தலைவர் ஒருவரை மிரட்டிய குற்றத்திற்காக கைது செய்யப்பட வேண்டும்.

இல்லையேல், சவால் விடுகிறேன், அவர் எந்த இடத்தில் அண்ணாமலையை மிரட்டினாரோ, நான் அதே இடத்தில் தமிழக பா.ஜ.க பொதுக்கூட்டத்தில், தமிழக அமைச்சர்களின் ஊழல் விவகாரங்கள்,முறைகேடுகள் குறித்தும் மக்களிடையே எடுத்து சொல்கிறேன். அமைச்சர் கீதா ஜீவன் கூறிய அதே வார்த்தைகளின்படி, தி.மு.க-வினருக்கும் சூடு, சொரணை இருந்தால், தைரியம் இருந்தால் மேடையில் ஏறி பார்க்கட்டும். தி.மு.க ஆண்டு கொண்டிருப்பது தமிழக என்ற மாநிலத்தைத்தான், ஆனால் பா.ஜ.க ஆள்வது இந்திய நாட்டை என்பதை தி.மு.க-வினர் மறந்துவிட வேண்டாம்” என்று அவர் கூறியுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Bjp Dmk Annamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment