/indian-express-tamil/media/media_files/ZCUKqjJKNdzWmaCFR2YC.jpg)
பா.ஜ.க. நிர்வாகி குருஜி கைது செய்யப்பட்டார்.
இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்தவர் குருஜி. இவர் பாஜகவில் மாநில அளவில் முக்கிய பொறுப்பில் உள்ளார். இவர் மீது அஹமது பஜாய் என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், இந்து- இஸ்லாமியர்கள் இடைய பகைமையை தூண்டும் விதமாக குருஜி தொடர்ந்து பேஸ்புக் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுவருகிறார் எனத் தெரிவித்து இருந்தார்.
மேலும், இஸ்லாமிய மத போதகர்கள் மற்றும் தர்கா குறித்தும் அவதூறு கருத்துகள் மற்றும் வரலாறுகளை முன்வைத்து எழுதுகிறார் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், “முகாந்திரம் இருந்தால் குருஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டது. இந்த நிலையில் குருஜியை போலீசார் காரைக்காலில் வைத்து கைதுசெய்தனர். இவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குருஜி பா.ஜ.க.வின் ஆன்மிக பிரிவில் உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.