/indian-express-tamil/media/media_files/YgtzJUqlQfpcTzqVRnPt.jpg)
சென்னை அபிராமபுரத்தில் உள்ள ரெஸ்டாரண்டில் வைத்து ரூ.1 கோடி கைமாற்றப்பட்டதாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
Nainar Nagendran | Lok Sabha Election | சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நெல்லை செல்லும் ரயிலில் கடந்த 6 ஆம் தேதி இரவு, உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டல், உறவினர் வீடுகளில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை விவரம் (FIR) வெளியாகியுள்ளது. மேலும், தொடர்பாக நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு’, தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
இந்த வழக்கில் கைதானவர்கள், “சென்னை அபிராமபுரத்தில் உள்ள ரெஸ்டாரண்டில் வைத்து ரூ.1 கோடி கைமாற்றப்பட்டது” என்றனர்.
இது குறித்து பாரதிய ஜனதா கட்சியின் தொழில் துறை மாநிலத்துணை தலைவர் கோவர்தனனின் மகன் கிஷோர் அளித்துள்ள வாக்குமூலத்தில், “தங்களது ரெஸ்டாரெண்டில் பணம் கைமாற்றப்பட்டது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அன்றைய தினம் சிசிடிவி கேமராக்களும் வேலை செய்யவில்லை எனக் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.